ஊரில் ஜமாத் சார்பில் பத்து ஆட்டோ ஐந்து ஓம்னி வேனும் வாங்கி விடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
ஜமாத்தார்கள் இந்த விசயம் பற்றி ஜமாத்தில் பேசுவதாக கூறியுள்ளனர் .பேசி செயல் படுத்தினால் நிச்சயமாக ஊருக்கு நன்மைதான் பேசி வெற்றியடைய வைப்பார்களா? பார்ப்போம்,
அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ்...இந்த வெப்தளம் புதுமடம் செய்திகளுக்காக!
தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011
புதுமடம்செய்தி/தமுமுக செய்திகள்
நீங்கள் இறந்தபின்....
31/10/2010
23/10/2010
இண்டெர்நெட் இணைப்பு வைத்திருப்போர் கவனத்திற்கு
இணைய இணைப்பு இப்போது நம் அன்றாட வாழ்வின் ஒன்றாக அமைந்துவிட்டது. தினமும் நாம் உபயோகித்துக் கொண்டிறிக்கிறோம். இதன் மூலம் நமக்கு நல்ல காரியங்களும் உள்ளது, நல்லதைக் காட்டிலும் தீயதும் உள்ளது, அதுவும் நமது நாட்டில் கிடைக்கும் இணைய இணைப்புகளில் ஒரு பாதுகாப்பும் இல்லை. இதனால் தான் நிறையப் பேர் இணைய இணைப்பின் தேவை இருந்தும் வீட்டில் வைப்பதற்கு பயப்படுகிறார்கள். இதனை எல்லாம் தடை செய்வதார்க்கான ஒரு மென்பொருள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.அதற்கான பாஸ்வேர்டினை அந்த தளமே இலவசமாக கொடுக்கிறது. அதனைப் பெறுவதற்க்கான முகவரியினை இங்கு கொடுக்கிறேன். அதனை எப்படி முறையாக செயல் படுத்தனும் என்பதனையும் படத்தினையும் இணைத்துள்ளேன்.குறிப்பாக அந்தப் பாஸ்வேர்ட் உங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டும்.வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் அதில் பலன் ஏதும் இல்லை.
http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image. Your browser may not support display of this image.
http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image. Your browser may not support display of this image.
17/10/2010
அயோத்தி மேல்முறையீடு!
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பிரித்தளித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி....பிபிசி.தமிழோசை.
சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி....பிபிசி.தமிழோசை.
வேலைவாய்ப்பு.?? ..17/10/2010

வேலைவாய்ப்பு:இது நமது சமுதாய இளைஞர்கள் சிந்திக்க எழுதிய கட்டுரை.....(உன்மையான வேலைவாய்ப்பு அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....நன்றி..........இனி தொடருங்கள்..........
இராமநாதபுரம் முழுவதும் சுவர் நோட்டீஸ் பளிச்சென மின்னுகிறது. இளைஞர் கூட்டம் அந்த நோட்டீஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.
யு.ஏ.இ. அபுதாபியில் உள்ள மப் அல் மப் என்ற கம்பெனிக்கு பட்டதாரி கிளினர்கள் தேவை. மாத ஊதியம் இந்திய மதிப்பு பத்தாயிரம், ஓவர்டைம் உண்டு, பாஸ்போர்ட் காப்பியுடன், கோர்ட் டை கட்டி சூப்பர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன், பாலிடெக்னிக், டிகிரி சர்டிபிகேடடுகளுடன் இண்டர்விக்கு வரவும். முன் பணம் பத்தாயிரம் கட்டி பதிவு செய்யவும். விசா கட்டணம் 80,000/= மட்டுமே. பணம் தோது செய்ய முடியவில்லை என்றால் பெற்றோர்களிடம் சொல்லி நிறைய சீதனப்பணம் தரும் வீடாக பார்த்து தவ்ஹீத் பேசினாலும் த.மு.மு.கவில் இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கட்ட வேண்டிய விசா பணத்துக்கு மேலே சென்னை வந்து போக, மெடிக்கல் போட, சூட்கேஸ், அட சூ சாக்ஸ் வாங்க மொத்த ரேட் போட்டு பெண்வீட்டாரிடம் சீதனப் பணம் வாங்கிக் கொள்ளவும்.
B.T.C, B.C.C, B.F.C, B.B.C படித்தவர்களும் பாலிடெக்க்னில் T.C, C.C, O.B படித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். முன்பு வளைகுடாவில் கிளினிக் கம்பெனியில் வேலைப் பார்த்திருந்தால் சான்று தேவை.
பரபரப்பாகிறது இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள அதுவும் நம் சமுதாயத்தவர் அதிகம் உள்ள இளைஞர் கூட்டம்.
அது என்ன? B.T.C, B.C.C, B.F.C, B.B.C நாம படிக்காமே போனோமே. நாம ஒன்பதாவது பாதியிலே, பத்தாவது பெயில்...........
B.T.C — BACHELOR OF TOILET CLEANING,
B.C.C — BACHELOR OF CLASS CLEANING,
B.F.C — BACHELOR OF FLOOR CLEANING,
O.B — OFFICE BOY (six month course) எப்படி சாயாப் போடுவது......
T.C — ONLY TOILET MAF.
இதுதானா டிகிரி என அசந்து போகிறது இளைஞர் கூட்டம். TOILET CLEANING செய்ய படிப்பா?
குறிப்பு :- இதனை காமெடியாக எழுதக் காரணம் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பாஸ்போர்ட் இருந்தால் போதும் வெளிநாடு வந்து அள்ளிச் சேர்க்கலாம் என பல இளைஞர்கள் குறிப்பாக நம் சமுதாயத்தவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இப்படித்தான் கிளினிக் கம்பெனியில் TOILET கழுவுகிறார்கள் அதுவும் வெறும் 700/= திரஹம் இந்திய மதிப்பு 8000/=ம் இதில் டெலிபோன் செலவு பாதி ….......
இளைஞர்களே........ தயவு செய்து படிப்பை பாதியில் நிறுத்தாமல் தகுதிவாய்ந்த படிப்பாக சிவில், கெமிக்கல், மெக்கானிக், ஆட்டோ மொபைல், லிஃப்ட் ஆப்ரேட்டர், ஏ.சி. மெக்கானிக் இப்படி ஒன்றை தேர்வு செய்யுங்கள்........நம் நாட்டிலேயே நல்ல வேலை கிடைக்கும். வேண்டாம் சீதனப் பணம் இதயம் செத்து தரும் பிச்சைக்காசு."
—புதுமடம் : கரீம் மதீனா — முத்தகீன்.யுஏஇ
இராமநாதபுரம் முழுவதும் சுவர் நோட்டீஸ் பளிச்சென மின்னுகிறது. இளைஞர் கூட்டம் அந்த நோட்டீஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.
யு.ஏ.இ. அபுதாபியில் உள்ள மப் அல் மப் என்ற கம்பெனிக்கு பட்டதாரி கிளினர்கள் தேவை. மாத ஊதியம் இந்திய மதிப்பு பத்தாயிரம், ஓவர்டைம் உண்டு, பாஸ்போர்ட் காப்பியுடன், கோர்ட் டை கட்டி சூப்பர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன், பாலிடெக்னிக், டிகிரி சர்டிபிகேடடுகளுடன் இண்டர்விக்கு வரவும். முன் பணம் பத்தாயிரம் கட்டி பதிவு செய்யவும். விசா கட்டணம் 80,000/= மட்டுமே. பணம் தோது செய்ய முடியவில்லை என்றால் பெற்றோர்களிடம் சொல்லி நிறைய சீதனப்பணம் தரும் வீடாக பார்த்து தவ்ஹீத் பேசினாலும் த.மு.மு.கவில் இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கட்ட வேண்டிய விசா பணத்துக்கு மேலே சென்னை வந்து போக, மெடிக்கல் போட, சூட்கேஸ், அட சூ சாக்ஸ் வாங்க மொத்த ரேட் போட்டு பெண்வீட்டாரிடம் சீதனப் பணம் வாங்கிக் கொள்ளவும்.
B.T.C, B.C.C, B.F.C, B.B.C படித்தவர்களும் பாலிடெக்க்னில் T.C, C.C, O.B படித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். முன்பு வளைகுடாவில் கிளினிக் கம்பெனியில் வேலைப் பார்த்திருந்தால் சான்று தேவை.
பரபரப்பாகிறது இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள அதுவும் நம் சமுதாயத்தவர் அதிகம் உள்ள இளைஞர் கூட்டம்.
அது என்ன? B.T.C, B.C.C, B.F.C, B.B.C நாம படிக்காமே போனோமே. நாம ஒன்பதாவது பாதியிலே, பத்தாவது பெயில்...........
B.T.C — BACHELOR OF TOILET CLEANING,
B.C.C — BACHELOR OF CLASS CLEANING,
B.F.C — BACHELOR OF FLOOR CLEANING,
O.B — OFFICE BOY (six month course) எப்படி சாயாப் போடுவது......
T.C — ONLY TOILET MAF.
இதுதானா டிகிரி என அசந்து போகிறது இளைஞர் கூட்டம். TOILET CLEANING செய்ய படிப்பா?
குறிப்பு :- இதனை காமெடியாக எழுதக் காரணம் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பாஸ்போர்ட் இருந்தால் போதும் வெளிநாடு வந்து அள்ளிச் சேர்க்கலாம் என பல இளைஞர்கள் குறிப்பாக நம் சமுதாயத்தவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இப்படித்தான் கிளினிக் கம்பெனியில் TOILET கழுவுகிறார்கள் அதுவும் வெறும் 700/= திரஹம் இந்திய மதிப்பு 8000/=ம் இதில் டெலிபோன் செலவு பாதி ….......
இளைஞர்களே........ தயவு செய்து படிப்பை பாதியில் நிறுத்தாமல் தகுதிவாய்ந்த படிப்பாக சிவில், கெமிக்கல், மெக்கானிக், ஆட்டோ மொபைல், லிஃப்ட் ஆப்ரேட்டர், ஏ.சி. மெக்கானிக் இப்படி ஒன்றை தேர்வு செய்யுங்கள்........நம் நாட்டிலேயே நல்ல வேலை கிடைக்கும். வேண்டாம் சீதனப் பணம் இதயம் செத்து தரும் பிச்சைக்காசு."
—புதுமடம் : கரீம் மதீனா — முத்தகீன்.யுஏஇ
15/10/2010
ஜெயேந்திரக்கொழுப்பு.
ஜெயேந்திரக் கொழுப்பு
எழுதியவர் மாதவராஜ் எழுதப்பட்டது 10:23 AM அடைமொழி அயோத்தி, அரசியல், இந்துத்துவா, சங்கராச்சாரியார், செய்திகள், நிகழ்வுகள்
தண்டத்தோடு வாய்தாவுக்கு அலைந்து கொண்டிருந்த ஜெயேந்திரர் என்றழைக்கப்படும் சுப்பிரமணி, இதோ திரும்பவும், காவி படிந்து நாற்றமெடுக்கும் தனது திருவாய் மலர்ந்தருள ஆரம்பித்திருக்கிறார். 2.10.2010 தினத்தந்தியில் ‘ஜெயேந்திரர் கருத்து’ என செய்தி வந்திருக்கிறது.
“இந்த வழக்கில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கின்றனர்.
“அதை முஸ்லீம்களே விரும்பமாட்டர்கள். முஸ்லீம்களுக்கு அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளன. இதனால் இன்னொரு மசூதியைக் கட்ட விரும்பமாட்டார்கள்”
அவர்கள் விரும்பக்கூடாது என்பதுதான் இதில் உள்ள செய்தி. இந்துக்களும், முஸ்லீம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்கிற தொனியில்லாமல், இந்துக்களோடு முஸ்லீம்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்கிற அரசியலும் இந்த வார்த்தைகளுக்குள் இருக்கிறது.
இருக்கிற மசூதிகள் முஸ்லீம்களுக்கு போதும் என்று சொல்லியவர், அடுத்து மேலும் சில படிகள் ஏறிச் செல்கிறார்.
“முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்திலிருந்தும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும்”
ஆக, முஸ்லீம்களுக்கு மசூதியே தேவையில்லை என கடைசிப்படியில் நின்று சொல்லியே விடுகிறார்.
ராமன் இருக்குமிடம் அயோத்தி என்பது, சீதைக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கிற பக்தர்கள் அனைவருக்குமான தெளிவுதானே. அப்படியானால் ராமர் வேறு எங்குமே இல்லையென்பதை இந்த ‘பீடாதிபதிகள்’ ஒத்துக்கொள்கிறார்களா? அப்புறம் நாடு முழுவதும் எதற்கு ராமர் கோவில்கள்? அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா?
பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான்.
இந்தப் பூசாரிகள் மௌனமாகிப் போக மாட்டார்கள்.
நண்பர் மயிலை பாலு அவர்கள், இந்தச் செய்தியை குறிப்பிட்டு, தீக்கதிர் பத்திரிகையில் எழுதி, “இந்தக் குசும்புதானே வேணாங்குறது..” என முடித்திருக்கிறார்.
இது குசும்பு இல்லை, கொழுப்பு.
நன்றி:தமிழ்மனம்..மாதவராஜ்
தீர்ப்பு அல்ல துரோகம்./அயோத்தி தீர்ப்பு
"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.
"நமது சமூகத்தில் மதவெறியர்களுக்கு(fanatics) இடமில்லை, இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு" இப்படி சொல்வது வேறுயாருமல்ல குஜராத் பாசிச மோடி என்ற மதவெறியன் தான்.
"தேசிய இணைவுக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது, உடனே ராமன் கோயிலை பெரிதாக கட்டுவோம்" இப்படி புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகின்றபடி உளறியது போல தெளிவாக உளறியிருப்பவன் திருவாளர் மார்க்கெட் போன அத்வானி.
அயோத்தித் தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம் செய்யும் மாயம் இந்த அதிசய பேச்சுக்களையெல்லாம் நாம் கேட்க வேண்டிய காலக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளும் இந்து மத வெறித் தலைவர்களின் நல்லொழுக்க பேச்சுக்களால் நிரம்பி வலிந்தன. இது அயோத்தித் தீர்ப்பு அல்ல, அயோக்கியத் தீர்ப்பு என்பதை இதுவே உரக்க ஒலித்தது.
இந்தத் தீர்ப்பில் இந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் மனசாட்சியாக நீதிமன்றத்தின் குரல் ஒலித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாபர் மசூதி மற்றும் அது இருந்த இடத்தின் மீதான முஸ்லீம்களின் உரிமை என்னென்ன காரணங்களை நிராகரித்து பறிக்கப்பட்டதோ அதே நிராகரிக்கப்பட்ட காரணங்களை/வாதங்களை ஏற்றுக் கொண்டு ஆர் எஸ் எஸ் காவி வெறியர்களுக்கு அந்த இடத்தின் மீது உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முரன்பாடு என்று கேட்டவர்கள் எல்லாம் நேற்று தேசவிரோதிகள் என்று தூற்றப்பட்டார்கள், கேலி செய்யப்பட்டார்கள்.
'அங்குதான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை எனவே அந்த இடம் அவர்களுக்கே சொந்தம்' (தீர்ப்பு நகல்1 மற்றும் 2) என்று சொல்லும் நீதிமன்றம்,
'அது பாபருக்கு சொந்தமான இடம் என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் என்பதும் போதுமான அளவு நிருபிக்கப்படவில்லை, எனவே உரிமையில்லை' (தீர்ப்பு நகல் 2, சரத்து 2) என்று கூறி முஸ்லீம்களின் உரிமையை மறுத்துள்ளது. ஆதாரமே இல்லாத ராமன் பிறந்த இடம் என்ற கட்டுக்கதை உண்மை ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் நேரடி ஆதாரமற்றது(தீர்ப்பு நகல் 1, சரத்து 2.) என்பதாலேயே 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பொய் ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.
இதைத்தான் இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: "இந்த நாட்டின் இராண்டம்தர குடிமகனாக உணர்கிறேன்". இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லீம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட நாட்டின் முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர் எஸ் எஸ்ன் இலட்சியமும் ஆகும்.இதைத்தான், 'தேசிய ஒருங்கிணைப்புக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது' என்று முழங்குகிறான் அத்வானி.
இல்லாத ராமனுக்கு அந்த இடம் சொந்தமாம், ஆனால் பாபர் கட்டவில்லையென்பதாலேயே அது மசூதிக்கு சொந்தமில்லையாம். அப்படியென்றால் இடிக்கப்பட்ட மசூதி என்ன அந்தரத்திலா தொங்கிக் கொண்டிருந்தது, அந்த இடத்தில்தானே இருந்தது? யார் கட்டினால் என்ன? மசுதி இருந்தது என்ற உண்மைதானே இங்கு முக்கியமானது? 1949ல் ராமன் சிலையை அங்கு வைத்த திருடன் யார் என்று நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்ததா? அப்போது மட்டும் இந்துக்களின் நம்பிக்கை முக்கியம், அதன் பூர்வாசிரமம் தேவையில்லை?
'1949ல்தான் மசூதியின் மைய கோபுரத்திற்குக் கீழே ராமன் சிலை வைக்கப்பட்டது (தீர்ப்பு நகல் 1,2,3). எனவே அது இந்துக்களுக்குச் சொந்தம்' என்று கூறியுள்ள நீதிமன்றம்.
'மசூதியை இஸ்லாம் சொல்லுகின்ற விதிகளின் படி கட்டவில்லை எனவே அது மசூதியில்லை(தீர்ப்பு நகல் 3), அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை" என்று கூறியுள்ளது. ராமன் சிலை மட்டும் இந்து விதிமுறைகளின் படித்தான் 1949ல் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதா என்ன? விதிமுறைகளெல்லாம் முஸ்லீமுக்கு மட்டும்தான் போலும்?
1949க்குப் பிறகு மைய கோபுரத்தின் கீழ் ராமன் சிலை வைக்கப்பட்டதால் அது இந்துவுக்குச் சொந்தம்(தீர்ப்பு நகல் 1, 2,3) எனில் 1949க்கு முன்புவரை அங்கு சிலையும் கிடையாது ஒன்றும் கிடையாது. பல நூறு வருடங்களாக அங்கு முஸ்லீம்கள்தான் தொழுதார்கள்(தீர்ப்பு நகல் 1,2). எனில், அவர்களுக்கு உரிமையில்லையா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதீர்கள். தேவைப்பட்டால் ஆயிரம் வருட பழய நம்பிக்கை(ராமன்) என்று நியாயப்படுத்தவும், தேவையில்லையெனில் லேட்டஸ்ட்(1949ல் சிலை வந்தது) என்னவென்று பாருங்கள் என்று நிராகரிக்கவும் ஆர் எஸ் எஸ்ன் மனசாட்சியாம் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.
அதாவது மைய கோபுரம் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்பது நிருபிக்கப்படவில்லை என்கிறது நீதிமன்றம். சரி இருக்கட்டும். ஆனால் இந்துக்களுக்கு மைய கோபுரம் சொந்தம் என்பதை மட்டும் எப்படி நீதிபதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்? அங்கு 1949ல் சிலை வைக்கப்பட்டதாலேயும், அதற்கு முன்பு வரை பொதுவாக அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று நம்பிக் கொண்டிருந்த இந்துக்கள், மசூதி உருவான பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இராமன் பிறந்தான் என்று மாற்றிக் கொண்ட இந்துக்கள், பிறகு 1949ல் திருட்டுத்தனமாக ராமனது சிலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழே வைக்கப்பட்டது எனவே அது இந்துக்களுக்குச் சொந்தமாம்(தீர்ப்பு நகல் 1, 2,3). நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் சொல்கிறது.
நீதிமன்ற தீர்ப்பில் எங்கேயுமே மைய கோபுரம் உள்ள பகுதி இந்துக்களுக்கு சொந்தம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதால் அதை அவர்களுக்குத் தருகிறோம் என்று சொல்லவில்லை. நிருபணம் எல்லாம் முஸ்லீம்களுக்குத்தான், இந்துக்களுக்கு நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் இதன் பொருள்.
"மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமையை சன்னி வக்பு வாரியம் நிருபிக்கவில்லை. மேலும், மசூதி இருந்த இடம் பாபருக்கு சொந்தமானது என்பதும் நிருபனமாகவில்லை" என்று கூறியுள்ளது நீதிமன்றம் (தீர்ப்பு நகல் 1, 2, 3).
ராமன் பிறந்த இடம் என்பதும்தான் நிருபிக்கப்படவில்லை, அங்கு ராமன் கோயில்தான் இருந்தது என்பதோ அல்லது கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதோ கூடத்தான் நிருபிக்கப்படவில்லை(தீர்ப்பு 1, 2). அந்த இடம் இந்துக்களுக்கானது என்பதும் கூடத்தான் நிருபிக்கப்படவில்லை. ஆனாலும் இந்துக்களின் நம்பிக்கை என்பதால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்குத் தரப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு.
பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் படி நிருபிக்கப்பட்டவையெல்லாம் இவைதான், 1) ஏற்கனவே, இடிந்த கோயில் ஒன்று இருந்துள்ளது, அங்குதான் மசூதி கட்டப்பட்டது. 2) கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. 3) மசூதி கட்டப்பட்ட பிறகுதான் மசூதி இருக்கும் அந்தக் குறிப்பான பகுதியில் ராமன் வழிபாடு நடக்கத் தொடங்கியது. 4)அதுவும் வெளிப் பிரகாரத்தில்தான். 5)1853 வரை மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லை, இரு மதத்தவரும் அக்கம் பக்கமாக வழிபட்டு வந்துள்ளனர்.
இதிலும் கோயில்தான் இருந்ததா என்பதை ஆணித்தரமாக அகழ்வாராய்ச்சியால்` சொல்ல இயலவில்லை. பூசி மெழுகவே செய்கிறார்கள்.
இவைதான் நிருபிக்கப்பட்டவையெனில், இதே நிலையை மீண்டும் கொண்டு வருவதுதானே நியாயம்? மசூதியின் பிரகாரத்தில் இந்துவின் வழிபாட்டையும், மசூதி இருந்த இடத்தில் மசூதியையும் கொண்டு வருவதுதானே நியாயம்?
தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், வெளிப் பிரகாரத்தில் சீதா மற்றும் ராமன் வழிபாடு நிகழ்ந்ததால் அது நிர்மோகி அகாராவுக்குச் சொந்தம், உள்ளே மைய ஸ்தூபியில் 1949ல் ராமன் சிலையை வைக்கப்பட்டதாலும் அதையே இந்துக்கள் அன்றிலிருந்து நம்பத் தொடங்கியதாலும் அந்த இடம் இனிமேல் மசூதிக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ சொந்தம் கிடையாது இந்து மகா சபைக்கே சொந்தம், 1992ல் மசூதி இடிக்கப்படும் வரை அங்கு மசூதி இருந்தது என்பது மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுவிட்டது எனவே போனால் போகிறது மூனாவது பங்கு முஸ்லீம்களுக்கு என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.
அதாவது 400 வருடம் மசூதி இருந்தது ரெவின்யு டிப்பார்மெண்டிலோ அல்லது நிலப் பட்டா மூலமோ ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை (பாபருக்கு இந்த சட்டப் பிரச்சினையெல்லாம் தெரியாமல் போனதற்கு பாவம் நீதிபதிகள் என்ன செய்வார்கள்) எனவே அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை போலும். 400 வருட மசூதிக்கு உரிமையில்லை ஆனால் 61 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ராமனது திருட்டு சிலைக்கு உரிமையுண்டு. ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை(புதிய நம்பிக்கையா, பழைய நம்பிக்கையா என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு தேவையில்லாத விசயம்).
இப்போது இந்தப் பிரச்சினையின் காலனி ஆட்சிக்கால பரிணாமத்தை புரிந்து கொள்வது தேவையாக உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்து முஸ்லீம் பிரித்தாளும் சூழ்ச்சியும், காலனியாதிக்க பிரிட்டிஷ்க்காரர்களின் ஏவல் படையாகச் செயல்பட்ட இந்துத்துவவாதிகளின் முஸ்லீம் எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு அரசியலும் இந்த பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.
நிர்மோகி என்ற குழு அங்கு கோயில் இருந்ததை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று களத்தில் இறங்கிய பிறகுதான் 1853ல் அங்கு முதல் மத மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் நடந்த கலவரங்களின் விளைவால், நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த அங்கு கூட்டாக இந்துக்களும், முஸ்லீம்களும் உள்பிரகாரத்தில் வழிபடுவது தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மசூதி இருந்தபடியால், இந்துக்களின் வழிபாடிற்கு என்று வெளிப் பிரகாரத்தில் ஒரு இடம் கட்டப்பட்டது.
இதுதான் பிரச்சினையின் மையமான பகுதி. 1850களில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தலைமையில் தென்னிந்தியாவில் ஒரு கூட்டிணைவு உருவாகி அது பிரிட்டிஸால் சிதைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் தலைமையில் தந்திரப் போரில் ஈடுபட்ட அரசர்கள் மூட்டிய கனல் 1805ல் வேலூர் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. பிற்பாடு, 1857ல் இந்திய சுதந்திரப் போராக இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பியது. இவையிரண்டும் பிரிட்டிஷ்க்காரர்களால் ஒடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கி இருந்தது.
மத பிரிவினைகள் இன்றி மக்கள் ஒன்று பட்டு நின்றது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அபாயமானது எனவே, பிரித்தாளும் தந்திரம் விரிவாக அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், புரட்சிகரமான இந்த காலகட்டத்தில்தான் துரோகமமும் உத்வேகத்துடன் முன்னுக்கு வந்தது. அந்தத் துரோகத்தின் வரலாற்றுக் குரலாக பதிவு செயப்பட்டதுதான், பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' என்ற புதினம், அதில் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவதே முக்கியம், பிரிட்டிஷ்க்காரர்களின் ஆட்சி நமக்குத் தேவையானது என்ற அரசியலும் பேசப்பட்டது. முஸ்லீம்களை விரட்ட செல்லும் கூட்டத்தினரின் 'தேசபக்த'ப் பாடலாக வந்தேமாதரம் பாடலும் புதினத்தில் இயற்றப்பட்டது.
இந்துத்துவாதிகளின் மதவெறி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரமும், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாளமும், லயமுமாக இணைந்து செயல்பட்டு இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை பிழைப்புவாத லாவணிக் கச்சேரியாகவும், மதவாத பிரிவினையாகவும் சிதைத்தன. இவைதான் பாபர் மசூதிப் பிரச்சினையில் தெரிந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மோதலைத் தூபம் போடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன.
ஒரு நீதிமன்றத் தீர்ப்பு முற்றுமுதலாக பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்க இயலுமா? அத்தகைய நம்பிக்கை பெரும்பான்மையினருடையது என்பது கூட ஜனநாயக முறையில் நிருபிக்கப்படாத பொழுது தீர்ப்பின் தன்மையை நியாயமானதாக எப்படி புரிந்து கொள்ள இயலும்? மசூதியை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியதை மீறி அது இடிக்கப்பட்டுள்ளதற்கு நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன? இவையெல்லாம் உண்மையில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதையல்ல மாறாக இன்னும் சில பல வருடங்களுக்கு அடித்துக் கொண்டு அப்பாவி மக்களை பலி கொடுக்கப்படுவதையே உறுதி செய்யும். அதைத்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் விரும்புகிறார்கள்.
இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.
நன்றி:அசுரன்..சென்னை.
13/10/2010
03/10/2010
நாம் தலை குனிகிறோம்.//

நாம் தலை குனிகிறோம்
"இறைவா எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் பாதை தவறிவிடாமல் காப்பற்று "
(1) கன்று மாடும் சேர்ந்தே வரும் SMS அனுப்பிட்டேன் அத்துடன் "சூப்பர் பிட்டும்" அனுப்பியிருக்கேன். அவள்க ஆட்டோவுல வருவாளுக.......நம்ம மாப்புதான் கூட்டிட்டு வருவான்...... அவள இங்கிட்டு வரவைக்க பெரும்பாடுபட்டேன்..... வாடா வந்து …....க்கி தொலை....
டேய் பார்ட்டி மினிலே ஏறி மப்ஸல பிடிச்சு பழைய பஸ்டாண்டுல நிக்கும் நான் பெரிசுட்ட தள்ளிட்டு, பெருசு காசுல ஃபுள் வாங்கி வெட்டிட்டு வருவேன்......
இந்த டயலாக்குகளும் இன்னும் இதயமே வெடித்துவிடும் டயலாக்குகளும் நம் கிராமத்து வீதிகளில் மிக சமீபகாலமாக, சர்வசாதரணமாக "டிரைவர்"களிடம் மேலும் இராமநாதபுரத்தில் அவரவருக்கு பிடித்த மளிகை,ஜவுளி, நகை கடைகாரர்களிடம் கேட்கும் அவமானத்திற்கு தள்ளப்பட்டோம்.......
சரி கட்டுரைக்கு வருவோம் நம் குடும்பத்தைக் காப்பாற்றவும் நடுத்தரமாய் நாகரீகமாக வாழவும் அடுத்த வீட்டாரைப் போல் எல்லா வசதிகளுடன் வாழவும் இதன் விடக் கொடுமையாக பெண் பிள்ளைகளை கட்டிக் கொடுக்க நம் வீட்டில் பிறந்த விட்ட கஷ்டத்திற்காக நகையும்,நட்டும், சீதனமும், சீராட்டும், மஞ்சள் பையும் கொடுக்க உணர்ச்சியற்ற இயந்திரமாய் பொருளையீட்டி வீட்டுக்கு அனுப்புறோம்.
(தவ்ஹீத் சகோதரர்களே இன்னும் நம் கிராமத்தில் வரதட்ச்சணை இல்லாத திருமணம் பகிரங்கமாகவில்லை.......கேட்பது கிடைப்பதால் இதனைப் பற்றி பேசுவதும் இல்லை)
இப்போதும் பலருக்கு போனில் ரிங்டோனாய் "காசு பணத்தை தேடுங்க" இரண்டாவதும் உட்கார்ந்திச்சு என்றே ஒலிக்கும்.
இதையும் மிஞ்சி பொருளாதரம் சேரச் சேர (எந்த வகையிலும்)
மாதாமாதம் உண்டியலாய் போய் சேரும்.........கார்கோவும் போய் சேரும்.
இவைகள் நமது குடும்பத்தினருக்கு நாம் செய்ய வேண்டியது கடமை என்றாலும் நவீன உலகத்தில் இண்டர்நெட் என்னும் மாய வலையில் நம் குடும்பம் சீரழிந்து போவதற்கும் நாமே காரணமாகிறோம்.
நம் பெண்கள் வறுமையை கண்டதில்லை,
எந்த பஸ், எந்த ஆட்டோ, எந்த வேனில் ஏறினாலும் நோய்க்கு காட்ட அதுவும் குத்தகை டாக்டரிடம் காட்ட,
சொந்த வாகனமாய் இருந்தால் இராம்நாட் போய் சேரும் வரை டிரைவர் காது குளிர, உச்சி கொட்ட, ரகசியம் தெரிய,கணவனை பற்றி, சொந்தக் கதை, சோகக் கதை, எப்போது ஊருக்குவருவார் பிள்ளைக் கொடுப்பார் என்ற பேச்சுகள்.......
ஒரே வாகன டிரைவரை வாடிக்கையாளராக்கி செல் போன் நம்பர் கொடுத்து "சிலுங்கள்" பாலான பாலான சிலுங்களாய்......
சுப்பு நம்ம டிரைவரை வரச் சொல்லுங்க என்ற கெஞ்சல்.......
இப்படி நமது குடும்பத்து பெண்கள் அறிந்தும் அறியாமலும் அவர்கள் வலையில் வீழ்ந்து இன்று மானம் வீதிக்கு வந்துவிட்டது.
நடுத்தர, செண்டர், நல்ல குடும்பத்து பெண்கள் என்பதால் சில நேரம் மூடிமறைக்கப்படுகிறது.
எந்த நாயை இவர்கள் தேடினார்களோ அந்த நாய் இவர்களை நக்கி ருசி பார்த்து அடுத்த நாயிடம் சொல்கிறது.
எனவே பொருளீட்ட வருவது முக்கியமல்ல "நமது கண்காணிப்பு "மிக மிக முக்கியம்...... சந்தேகப்பட வேண்டாம் முறையான் அணுகுமுறை கையாள வேண்டும்.
நாம் நொந்து நூடூல்சாகி கையை பிசைவதற்கு முன், தலை குனிவை பெறுவதற்கு முன்.
விழித்துக் கொள்ள வேண்டும், கையடக்க செல்போனில் நம் சொந்தகாரர்களை தவிர தவறான நம்பர் எனில் கண்டுபிடித்து " " காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும்.
அவசரம், அவசியம் இல்லாமல் வாகனங்களில் (சொந்த வாகனமாகவும் இருந்தாலும் சரி) பெண்கள் பயணிப்பதை தடுக்க வேண்டும்.
இடங்களுக்கு செல்லும் போது பெரியவர்களை துணைக்கு அழைத்துச் செல்ல கட்டளை இட வேண்டும். இப்படி முறையான கவனிப்பு இல்லாமல் போனால் மேற்படியார்களுக்கு ஊறுகாயும், அவலும் இலவச இணைப்பாக கிடக்கும். நடுத்தரம் இப்போது நாறுகிறது.
—புதுமடம் கரீம் மதீனா(முத்தக்கீன்)—யு.ஏ.இ.
"இறைவா எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் பாதை தவறிவிடாமல் காப்பற்று "
(1) கன்று மாடும் சேர்ந்தே வரும் SMS அனுப்பிட்டேன் அத்துடன் "சூப்பர் பிட்டும்" அனுப்பியிருக்கேன். அவள்க ஆட்டோவுல வருவாளுக.......நம்ம மாப்புதான் கூட்டிட்டு வருவான்...... அவள இங்கிட்டு வரவைக்க பெரும்பாடுபட்டேன்..... வாடா வந்து …....க்கி தொலை....
டேய் பார்ட்டி மினிலே ஏறி மப்ஸல பிடிச்சு பழைய பஸ்டாண்டுல நிக்கும் நான் பெரிசுட்ட தள்ளிட்டு, பெருசு காசுல ஃபுள் வாங்கி வெட்டிட்டு வருவேன்......
இந்த டயலாக்குகளும் இன்னும் இதயமே வெடித்துவிடும் டயலாக்குகளும் நம் கிராமத்து வீதிகளில் மிக சமீபகாலமாக, சர்வசாதரணமாக "டிரைவர்"களிடம் மேலும் இராமநாதபுரத்தில் அவரவருக்கு பிடித்த மளிகை,ஜவுளி, நகை கடைகாரர்களிடம் கேட்கும் அவமானத்திற்கு தள்ளப்பட்டோம்.......
சரி கட்டுரைக்கு வருவோம் நம் குடும்பத்தைக் காப்பாற்றவும் நடுத்தரமாய் நாகரீகமாக வாழவும் அடுத்த வீட்டாரைப் போல் எல்லா வசதிகளுடன் வாழவும் இதன் விடக் கொடுமையாக பெண் பிள்ளைகளை கட்டிக் கொடுக்க நம் வீட்டில் பிறந்த விட்ட கஷ்டத்திற்காக நகையும்,நட்டும், சீதனமும், சீராட்டும், மஞ்சள் பையும் கொடுக்க உணர்ச்சியற்ற இயந்திரமாய் பொருளையீட்டி வீட்டுக்கு அனுப்புறோம்.
(தவ்ஹீத் சகோதரர்களே இன்னும் நம் கிராமத்தில் வரதட்ச்சணை இல்லாத திருமணம் பகிரங்கமாகவில்லை.......கேட்பது கிடைப்பதால் இதனைப் பற்றி பேசுவதும் இல்லை)
இப்போதும் பலருக்கு போனில் ரிங்டோனாய் "காசு பணத்தை தேடுங்க" இரண்டாவதும் உட்கார்ந்திச்சு என்றே ஒலிக்கும்.
இதையும் மிஞ்சி பொருளாதரம் சேரச் சேர (எந்த வகையிலும்)
மாதாமாதம் உண்டியலாய் போய் சேரும்.........கார்கோவும் போய் சேரும்.
இவைகள் நமது குடும்பத்தினருக்கு நாம் செய்ய வேண்டியது கடமை என்றாலும் நவீன உலகத்தில் இண்டர்நெட் என்னும் மாய வலையில் நம் குடும்பம் சீரழிந்து போவதற்கும் நாமே காரணமாகிறோம்.
நம் பெண்கள் வறுமையை கண்டதில்லை,
எந்த பஸ், எந்த ஆட்டோ, எந்த வேனில் ஏறினாலும் நோய்க்கு காட்ட அதுவும் குத்தகை டாக்டரிடம் காட்ட,
சொந்த வாகனமாய் இருந்தால் இராம்நாட் போய் சேரும் வரை டிரைவர் காது குளிர, உச்சி கொட்ட, ரகசியம் தெரிய,கணவனை பற்றி, சொந்தக் கதை, சோகக் கதை, எப்போது ஊருக்குவருவார் பிள்ளைக் கொடுப்பார் என்ற பேச்சுகள்.......
ஒரே வாகன டிரைவரை வாடிக்கையாளராக்கி செல் போன் நம்பர் கொடுத்து "சிலுங்கள்" பாலான பாலான சிலுங்களாய்......
சுப்பு நம்ம டிரைவரை வரச் சொல்லுங்க என்ற கெஞ்சல்.......
இப்படி நமது குடும்பத்து பெண்கள் அறிந்தும் அறியாமலும் அவர்கள் வலையில் வீழ்ந்து இன்று மானம் வீதிக்கு வந்துவிட்டது.
நடுத்தர, செண்டர், நல்ல குடும்பத்து பெண்கள் என்பதால் சில நேரம் மூடிமறைக்கப்படுகிறது.
எந்த நாயை இவர்கள் தேடினார்களோ அந்த நாய் இவர்களை நக்கி ருசி பார்த்து அடுத்த நாயிடம் சொல்கிறது.
எனவே பொருளீட்ட வருவது முக்கியமல்ல "நமது கண்காணிப்பு "மிக மிக முக்கியம்...... சந்தேகப்பட வேண்டாம் முறையான் அணுகுமுறை கையாள வேண்டும்.
நாம் நொந்து நூடூல்சாகி கையை பிசைவதற்கு முன், தலை குனிவை பெறுவதற்கு முன்.
விழித்துக் கொள்ள வேண்டும், கையடக்க செல்போனில் நம் சொந்தகாரர்களை தவிர தவறான நம்பர் எனில் கண்டுபிடித்து " " காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும்.
அவசரம், அவசியம் இல்லாமல் வாகனங்களில் (சொந்த வாகனமாகவும் இருந்தாலும் சரி) பெண்கள் பயணிப்பதை தடுக்க வேண்டும்.
இடங்களுக்கு செல்லும் போது பெரியவர்களை துணைக்கு அழைத்துச் செல்ல கட்டளை இட வேண்டும். இப்படி முறையான கவனிப்பு இல்லாமல் போனால் மேற்படியார்களுக்கு ஊறுகாயும், அவலும் இலவச இணைப்பாக கிடக்கும். நடுத்தரம் இப்போது நாறுகிறது.
—புதுமடம் கரீம் மதீனா(முத்தக்கீன்)—யு.ஏ.இ.
Subscribe to:
Posts (Atom)


